இலங்கையில் அதிகளவில் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் நேற்று (24) மாலை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் எட்டு T-56 தோட்டாக்களும் 15 பயிற்சி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதான அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
