இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைதானவர்கள் இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சுற்றுலாவிற்காக வருகை தந்த பயணிகளான இருவரும் பிரேசில் மற்றும் பெல்ஜியப்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு, முச்சக்கர வண்டி சாரதிகள் 10,000 ரூபாவுக்கு பதிலாக 30,000 ரூபாய் பணத்தை அவர்களிடமிருந்து பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்த மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
