ஒன்டாரியோவைச் சேர்ந்த மெத்தியூ அல்தார்ப் (Matthew Althorpe) என்ற 29 வயது இளைஞன், சர்வதேச நியோ-நாஜி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகளை டொராண்டோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நயாகரா பிராந்தியத்தைச் சேர்ந்த அல்தார்ப், ஆட்டம்வாஃபென் பிரிவு (Atomwaffen Division – AWD) என்ற அமைப்பிற்காகப் பிரச்சாரம் செய்ததுடன், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதையும் ஒப்புக்கொண்டார்.
ஆட்டம்வாஃபென் பிரிவு அமைப்பிற்காக ஆள்சேர்க்கும் பிரச்சாரப் பொருட்களைத் தாம் தயாரித்ததாகவும், கனடாவிற்குள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகவும் அல்தார்ப் தெரிவித்தார்.
இது இனவெறி மற்றும் வன்முறையைத் தூண்டும் சர்வதேச நியோ-நாஜி (Neo-Nazi) அமைப்பாகும்.
இந்த அமைப்பை கனடா அரசு 2021ஆம் ஆண்டு ஒரு தீவிரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது.
கனேடிய காவல்துறை நடத்திய 18 மாத கால விரிவான விசாரணையின் முடிவில், 2023 டிசம்பரில் அல்தார்ப் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
