இவ்வாண்டுக்கான நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளனர்.
இதன்படி அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவில் சர்வாதிகாரத்தை விடுத்து ஜனநாயகத்திற்காக ஒரு அமைதியான மாற்றத்தை உருவாக்கியதற்கும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
