ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இவ்வாண்டுக்கான உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்காவில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
ஜி20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இம் மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இம்முறை இடம்பெற்று வரும் இம்மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம் , எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


