பலஸ்தீனத்தின் காஸாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாம்கள் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில், கடந்த ஆறு வாரங்களில் 798 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன.
இங்கு நாளொன்றுக்கு ஐந்து லொறிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. நிவாரண பொருட்களைப் பெற்றுக்கொள்ள வரும் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றது.
இந்நிலையில் மே 27 தொடங்கி ஜூலை 7 வரையிலான ஆறு வாரத்தில் மட்டும், 798 பேர் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது.


