நாட்டில் அண்மைக் காலமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராம, சந்துங்கம பகுதியில் இன்றையதினம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் 58 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் கல் கடஸ் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தெரிய வருகையில் சந்தேக நபருக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவினாலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
