கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
வாஷிங்டன் அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவிக்கையில் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இந்த நிலநடுக்கமானது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
பொகோட்டாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நிலநடுக்கம் பற்றி கூறுகையில்,
கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பயமடைந்த குடியிருப்பாளர்கள் சாலைகளில் ஒன்று குவிந்தனர் என்று அவர் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
