18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் 2024/2025ம் ஆண்டில் சைபரில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தையும் விட 50% அதிகரித்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் குற்றங்களுக்காக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர், 2025 ஆம் ஆண்டில் 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் 375 பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாகவும், சம்பவம் தொடர்பாக 114 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நடப்பாண்டில் இதுவரை 118 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
