புது வருடத்தின் முதல் நாளான இன்று அரச உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பிரகாரம் வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்தனர்.
அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றியிருந்ததுடன் இரண்டு நிமிட மெளன பிரார்த்தனையும் இடம்பெற்று அதன் பின்னர் சத்திய பிரமாண நிகழ்வும் இடம்பெற்று இருந்தது.
இதனை அடுத்து சர்வ மத தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


