Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வீதி அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் , தீவகத்திற்கான பாதுகாப்பான போக்குவரத்து பயணங்கள் தொடர்பில் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

யாழ் . மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.

அதன் போது, யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்து துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக எவ்வாறான பகுதிகளில் வீதி அபிவிருத்திகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். எப்பகுதிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை தேவைப்படுகின்றது உள்ளிட்ட விடயங்கள் பேசப்பட்டன.

அதேவேளை தீவு பகுதிகளுக்குரிய பாதுகாப்பான கடல் போக்குவரத்து பயணம் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்து யாழ்.மாவட்டத்தை மையப்படுத்தியதான பொது போக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து மற்றும் சந்தை நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து என்பன பற்றியும் கவனம் செலுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ச. சிறிபவானந்தராஜா , க. இளங்குமரன் மற்றும் ஜெ ராஜீவின், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் செயற்பாட்டில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவாயில்கள்

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட விரோத மணல் அகழ்வின் போது துப்பாக்கிச்சூடு(Video)

டிசம்பர் 18, 2025
இலங்கை

மின்சார கட்டணம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம்!

அக்டோபர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்சிக்கு எதிராக செயற்பட்டோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஜூலை 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?