யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவரது வீட்டை சுற்றிவளைத்த சுன்னாகம் பொலிஸார் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 10 லீட்டர் கசிப்புடன் குறித்த பெண்ணை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


