கார்னி அரசாங்கம் விரைவில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், மத வழிபாட்டுத் தலங்கள், கலாச்சார சமூக மையங்கள் மற்றும் பள்ளிகளுக்குள் நுழையும் மக்களை அச்சுறுத்துபவர்கள் மற்றும் தடையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
இந்த சட்ட மசோதா அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
இந்த புதிய சட்டம், கனடாவின் குற்றவியல் சட்டத்தின் (Criminal Code) கீழ் மூன்று புதிய குற்றங்களை உருவாக்கும். இதில் மிக முக்கியமானது, வெறுப்புக் குற்றம் (hate crime) தொடர்பான ஒரு புதிய பிரிவை உருவாக்குவதாகும்.
இந்த சட்டங்கள், யூத எதிர்ப்பு (antisemitism) மற்றும் இஸ்லாமோஃபோபியா உட்பட பல காலமாக அதிகரித்து வரும் வெறுப்புச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
