வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர பண்டார மற்றும் லக்ஷித மனோஜ் வீரபாகு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட இவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.