மானநஷ்ட இழப்பீடு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனுப்பிய சட்ட அறிவிப்பிற்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பேசிய பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இது தொடர்பில் கூறுகையில்,
தனக்கு இன்னும் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்றாலும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 14 நாட்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
“அவர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பயிற்சி செய்யாததால், அவருக்கு இது பற்றித் தெரியாமல் இருக்கலாம். வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடயங்களில் வாதியை விசாரிக்கக்கூடிய ஒரே வகை வழக்கு அவதூறு வழக்குகள் மட்டுமே” என்று வட்டகல கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வழக்குத் தாக்கல் செய்யத் தவறினால், நீதிமன்றத்தில் குறுக்கு முறையீடு கோரி இழப்பீடு கோருவேன் என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரித்தார்.
