Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவு தொடர்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் கருத்து!

செப்டம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப் பேசும் முன் நடிகர் விஜய் ஆழமான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் இன்று அவரது அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

கச்சதீவு இந்தியா இலங்கைக்கு விட்டுத்தந்ததல்ல. சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1974ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவிடம் கையளித்தார்.

இலங்கையிடம் கச்சதீவு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் 1600ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி பழமையான ஆவணங்கள் உள்ளன.

 ஐ.நா அமைதிப் பணியில் மூன்று தசாப்தங்கள் பணியாற்றிய இந்திய நிபுணர் திரு. கண்ணன் ராஜரத்தினமும் “சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது; இந்தியாவிடம் இதை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

“ஆகையால், முன்னாள் நடிகரும் தற்போதைய அரசியல்வாதியுமான விஜய், கச்சதீவு குறித்து பேசுவதற்கு முன், இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட ஆழ்வலை மீன்பிடி முறையின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டங்களை அவர்களுக்கு முன்னெடுக்க வேண்டும்,” ஏனெனில் கச்சதீவை விட முக்கியமான விடயம் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய ஆழ்வலை மீன்பிடி முறையாகும் என அவர் வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி பிரதி காவல்துறை மாஅதிபராக நியமனம் பெறவுள்ள நால்வர்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் வாடகை ஆட்டோவில் ஆட்டை திருடிய நபர் ஆட்டுடன் ஓட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மின்சார சபையை நான்கு நிறுவனங்களாகப் பிரிப்பது குறித்து நுகர்வோர் சங்கம் கருத்து!

செப்டம்பர் 26, 2025
இலங்கை

வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஆகஸ்ட் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 10, 2025
இலங்கை

யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?