இலங்கை மத்திய வங்கியின்75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தால் விசேட நினைவு முத்திரையொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இச் செயற்பாடு பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தேசிய சேவையின் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
“செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற கருப்பொருள் கொண்ட இந்த முத்திரை, நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல், பணவியல் கொள்கையை வழிநடத்துதல் மற்றும் தேசிய வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றில் இலங்கை மத்திய வங்கியின் ஏழரை தசாப்த கால அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த முத்திரை, இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் மத்திய வங்கியின் நீடித்த பங்கைக் குறிக்கிறது – சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் இருந்து உலகளாவிய நிதி சவால்களை வழிநடத்துவதில் அதன் நவீன முயற்சிகள் வரை தெளிவுபடுத்துகின்றது .

