மெக்சிக்கோவில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியுள்ளதாக மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியாக ஆயிரக்கணக்கான மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், மெக்சிக்கோ நகரம், உட்பட பல முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவின் ஜனாதிபதி கிளோடியா ஷின்பாமின் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே பெரும்பாலானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களுக்கு அமைய ஒரு 130,000ற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மெக்சிக்கோவில் போதைப் பொருட்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் கும்பல்களினால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு போதைப் பொருள் உற்பத்தி மற்றும் அது தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
