கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக நடத்தப்படும் சிற்றூண்டிச்சாலை முறையான விலைமனு கோரல் இன்றி தனியாருக்கு வழங்கப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கொள்முதல் குழு, விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பதாக உணவகத்தை நடத்தி வந்த தரப்பினரைக் கடந்த 25 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே புதிய தரப்பினருக்கு நாளைய தினம் சிற்றூண்டிச்சாலையை நடத்துவதற்கு எவ்வித விலைமனு கோரலும் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கடந்த 25 ஆம் திகதி முதல் சிற்றூண்டிச்சாலை மூடப்பட்டதால் மருத்துவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
