கனடாவிற்கான புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் போட்டித்தேர்வில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான இரண்டு நிறுவனங்களில், தென் கொரியாவின் ஹன்வா ஓஷன் (Hanwha Ocean) நிறுவனம், தனது போட்டியாளரான ஜெர்மன் நிறுவனத்தை விட, வேகமாக நீர்மூழ்கிக் கப்பல்களை விநியோகம் செய்வதாக உறுதியளித்துள்ளது.
தமது விரைவான விநியோகத்தின் மூலம், கனடாவின் அரசு சுமார் ஒரு பில்லியன் டொலருக்கும் மேல் சேமிக்க முடியும் என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி, சமீபத்தில் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ்ஸை சந்தித்தபோது, இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்துக்கான ஏலதாரர்கள் நான்கு நிறுவனங்களிலிருந்து இரண்டு நிறுவனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கனடாவின் கடற்படைக்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால், ஹன்வா ஓஷன் மற்றும் ஜெர்மனியின் திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ் (TKMS) ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், கனடாவின் தற்போதைய விக்டோரியா-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, 2035-ஆம் ஆண்டுக்குள் முதல் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை முழுமையாக வழங்க முடியும் என ஹன்வா ஓஷன் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
