நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு இயங்காத நிலையில் காணப்படும் பெண்நோய்யியல் பிரிவு தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று மாவட்ட வைத்தியசாலைப்பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டோரிடம் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.
தொடர்ந்து குறித்த பிரிவினையும் பார்வையிட்டார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். குறித்த பிரிவு தொடர்பாக வெளியிலே பெரிய செய்தி பரப்பப்படுகிறது. அது தொடர்பாக ஆராயும் நோக்குடன் வருகை தந்திருந்தேன் இது தொடர்பாக வைத்தியசாலைப்பணிப்பாளரிடம் கலந்துரையாடிருந்தேன் எக்காரணம் கொண்டும் குறித்த பிரிவிலுள்ள உபகரணங்கள் கொண்டு செல்லப்படாது.
இது தொடர்பாக எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்தனர்.மிகப்பெரிய தேவைகள் உள்ளது. 20தாதியர்கள் தேவை இதற்குரிய அனுமதி இன்னும் வழங்கவில்லை இது தொடர்பாக என்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி முன்னெடுப்பேன் என தெரிவித்தார்.
