குற்றச் செயற்பாடுகள் ஊடாக பெறப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க இலங்கை காவல்துறை புதிய விசாரணைப் பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றத்திலிருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின்படி இந்த விசாரணைப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விசாரணை பிரிவு, குற்றத்திலிருந்து ஈட்டப்பட்ட சொத்து விசாரணை பிரிவு என பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய விசாரணைப் பிரிவு, காவல்துறை மா அதிபர் – மக்கள் சந்திப்பு தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


