உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடும் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும் போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும்.
இது தொடர்பில் எமது கட்சி தலைவர் தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.