காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்தல் அமைப்பு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சா்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவாக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது. இதை உடனடியாக நிறுத்தி, மாற்றியமைக்க முடியும்.
இது தொடா்பான விவாதங்களுக்கு நேரம் முடிந்துவிட்டது. நகரில் தற்போது கொடிய பசிப் பிணி வேகமாகப் பரவி வருகிறது. காஸா சிட்டிக்கு பெரிய அளவிலான மனிதாபிமான உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறு. இன்னும் ஒரு நாள் தாமதித்தாலும், பஞ்சத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயரும்.
போா் நிறுத்தம் அமுலாக்கப்படாமல், காஸா முழுவதும் உணவு, மருத்துவம், ஊட்டச்சத்து, குடிநீா், சுகாதார சேவைகள் உடனடியாக வழங்கப்படாமல் இருந்தால், தவிா்க்கப்படக்கூடிய உயிரிழப்புகள் பன்மடங்கு உயரும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச் சத்து குறைபாட்டின் தீவிரத்தை மூன்று முக்கிய அளவுகோல்களைக் கொண்டு ஆய்வு செய்து, அந்தப் பகுதியில் பஞ்ச நிலையை ஐ.பி.சி அறிவித்துவருகிறது.
