நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் வார இறுதியில் பெய்த மழையும், குளிர்ந்த தட்பவெப்ப நிலையும் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவியுள்ளதாக மாகாண இயற்கை வளத்துறை அமைச்சர் ஜான் ஹெரான் தெரிவித்தார்.
எனினும், மாகாணம் இன்னும் முழுமையாக ஆபத்திலிருந்து வெளியேறவில்லை என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, எட்மண்டன் பகுதியில் உள்ள காடுகளில் சில வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காட்டுத் தீ அபாயம் இன்னும் அதிகமாகவே உள்ளது எனவும் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் பெய்த மழையானது காட்டுத் தீயை ஓரளவு மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது எனவும் மாகாண இயற்கை வளத்துறை அமைச்சர் ஜான் ஹெரான் சுட்டிக்காட்டியுள்ளார்.
