கனேடிய பிரதமர் மார்க் கார்னி, ரஷ்யாவின் கியேவ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான அமெரிக்காவின் திறந்த தன்மையை வரவேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
“எந்தவொரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கும் வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம்.
விருப்பக் கூட்டணியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான அமெரிக்காவின் திறந்த தன்மையை நான் வரவேற்கிறேன்,” என்றுகூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
