காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய அமைச்சர் லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட அறிமுகம் (GCF மற்றும் இலங்கை அரசு நிதி) திட்ட செயல்பாடுகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர, விவசாய அமைச்சின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
