சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஹட்டன் SLTB பணிமனையால் உருவாக்கப்பட்ட சஃபாரி பேருந்து இன்றையதினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த பேருந்து சேவையினை நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுலா சுரவீர ஆராச்சி , நுவரெலிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
குறித்த பேருந்து இயற்கை காட்சிகளை இரசிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரத்ம்லானை பணிமனையில் இருந்த பழைய பேருந்தே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திற்குள்ளேயும், வெளியேயும் பயணம் செய்வதற்கு சஃபாரி பேருந்தை முன்பதிவு செய்து கொள்ள முடியுமென பணிமனை மேலாளர் பாலித வீரசூரிய தெரிவித்தார்.
