மன்னாரில் 2ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னாரில் ‘கருநிலம் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளுடன் இளைஞர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னாரில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி கனிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுமாயின், மன்னார் அழிவடையுமெனக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
