வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணிக்குள் குறித்த தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
