2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் பங்களாதேஷில் பொது தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புதிய ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்யும் பொருட்டு இத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு நடைபெறக் கூடிய தேர்தல் சவாலான முறையில் இடம்பெறலாம் என கணித்திருந்த போதிலும் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலாக நடத்தப்படுமென உறுதியளித்துள்ளது.
எதிர்வரும் பொது தேர்தலுக்கான திகதி அட்டவணைகளை இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியிடுவோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
தேர்தலுக்கான திகதி அட்டவணை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஏ.எம்.எம். நசீர் உதீன் தெரிவித்துள்ளார்.
