பாகிஸ்தானிலிருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்ட அதிவேக ரயிலொன்று தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த ரயிலானது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்டுள்ளது.
சுமார் 100 இற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர்.
சரியாக ஷேகாபுரா ரயில் நிலையத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ரயிலின் பத்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளன. இவ் விபத்தில் சுமார் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த அதிகாரிகள் குறித்த இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எதனால் இச் சம்பவம் நிகழ்ந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
