அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் குழுத் தலைவர் ஹர்ஷ த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி குழுவின் ஒன்றிணைந்த கூட்டத்தில், 2018 ஆம் ஆண்டு மிகைப்பொருள் திணிப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வு சட்ட ஒழுங்குவிதிகள் (2025 மார்ச் 27, 2429/32 வர்த்தமானி) கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் திடீர் இறக்குமதிகளால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கூட்டுறவு துறையில் கடன் வழங்கல் ஏற்பாடுகள் இல்லாதது குறித்து விவாதிக்கப்பட்டு, அமைச்சர் சமரசிங்க முறையான விசாரணைக்கு பரிந்துரைத்தார். மாகாண ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்களுடன் விசேட குழு அமர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
