Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சமூக ஆர்வலர் அமானி ரிஷாட் ஹமீத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 27 பேர் அடங்குவர்.

இதன் மூலம், இலங்கை பிரஜைகளின் உயிரியல் தரவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இந்தியா அணுக முடியும் என்றும், இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான இரண்டு அமைச்சரவை முடிவுகள் ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசு தலையிட வாய்ப்பளிக்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு , இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை செல்லாததாக்க உத்தரவு பிறப்பிக்கவும், இந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதைத் தடுக்கவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!
அடுத்த செய்தி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!(Video இணைப்பு )

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்.

பிப்ரவரி 23, 2025
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இன்று 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சந்திப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்!

ஜூன் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?