பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில், கோட்டை இராச்சிய சுற்றுலாப் பாதை மற்றும் ‘கோட்டை பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ், நேற்று அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
இது இலங்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். இந்த சுற்றுலாப் பாதை, வரலாறு, இயற்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் பயணமாகும். கோட்டே, இலங்கையின் நிர்வாகத் தலைநகராக மட்டுமல்ல, வரலாற்று, கலாசார, சூழலியல் முக்கியத்துவம் கொண்ட இடமாகவும் உலகிற்கு அறிமுகமாகிறது.
உலகின் முதல் ஈரநிலத் தலைநகரான கோட்டை, நகர்ப்புற வாழ்க்கையும் உயிர்ப்பல்வகைமையும் இணைந்து வாழும் முன்மாதிரியாக விளங்குவதாகவும், இதன் 14ஆம் நூற்றாண்டு வரலாறு, சிங்கள இலக்கியம், கட்டிடக்கலை ஆகியவற்றின் பொற்காலத்தை பிரதிபலிக்கிறது.
கோட்டையின் பண்டைய சுவர்கள், கால்வாய்கள், மத ஸ்தலங்கள், ஈரநிலங்கள், பறவைகள் உள்ளிட்டவை இதன் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும், இத்திட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு கோட்டையின் மறைந்திருக்கும் அழகை ஆராய வாய்ப்பளிப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். “கோட்டே ஒரு வாழும் அருங்காட்சியகமாகவும், திறந்த வகுப்பறையாகவும் மாறுகிறது,” என்றார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க ஆகியோர், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியாக இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
கோட்டை நகர பிதா அரோஷ அத்தபத்து, கோட்டேயில் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் போன்ற வசதிகளை நிறுவ அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட மாநகர சபை தயாராக உள்ளதாக இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தெரிவித்தார்.
கோட்டை பசுமை சுற்றுலா வலையமைப்பு மற்றும் மேல் மாகாண சுற்றுலா சபையின் ஏற்பாட்டில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
