கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பொலிஸ் அத்தியட்சகராக ஜெயசாந்த டீ சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய சிசிர பெத்தர தந்திரி கொழும்பு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயசாந்த டீ சில்வா தனது கடமைகளை இரணைமடுவில் உள்ள அலுவலகத்தில் காலை 11.00மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்பு ஜெயசாந்த டீ சில்வா இதற்கு முன்பு கொழும்பு தெற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.2017ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
