செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பு ‘மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு’ ஆதரவுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


