இலங்கையில் 18 கிலோ 123 கிராம் “ஹஷிஷ்” போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த கனேடிய பெண்ணொருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணால் கொண்டுவரப்பட்ட “ஹஷிஷ்” போதைப்பொருள் 18 கோடியே 10 இலட்சம் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
37 வயதுடைய இந்த கனேடிய பெண் கனடாவின் மொண்ட்ரியலில் இருந்து கட்டாரின் தோஹா நகருக்கு வந்து அங்கிருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
