கஹவத்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரும் ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று பெல்மடுல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், சம்பவத்தில் உதவிய 4 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு, புலன்சூரியகம பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸராக நடித்த சந்தேகநபர்களால் கைவிலங்கிட்டு கடத்தப்பட்டனர். இதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்ததாக சந்தேகித்து இந்தக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஹோமாகம மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள், டுபாயில் தஞ்சமடைந்த “ஹந்தயா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கியவர்கள் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப், கார் 3 மோட்டார் சைக்கிள்கள் இலக்கத்தகடுகள், 197 கிராம் ஹெரோயின் மற்றும் 96 கிராம் ஐஸ் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
