Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்!

ஜூலை 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதத்துக்கான அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது,

அதன் போது, யாழ்ப்பாணம் மாநகரசபையில் 16 உழவியந்திரங்கள் வாடகை அடிப்படையில் கழிவகற்றும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. அவற்றுக்கான மாதாந்த வாடகையாக 50 இலட்சம் ரூபாவும், வருடாந்த வாடகையாக 6 கோடி ரூபாவும் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.

மாநகரசபைக்குச் சொந்தமான வாகனங்கள் சிறிய பழுதுகளுடனேயே இயங்காமல் உள்ளன. எனவே, அந்தப் பழுதைச் சரிசெய்வதை விடுத்து, அதைவிடப் பலமடங்கு தொகையை வாடகைக்காகச் செலவிடுவது யாழ்ப்பாணம் மாநகரசபையின் பணத்தை தேவையற்றுச் செலவழிக்கும் செயற்பாடாக அமைவதுடன், இதில் ஊழல் மோசடிகள் உள்ளதாகவும் சந்தேகப்படுகின்றோம் என்று உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்தார்.

அத்துடன் மாநகரசபைக்குச் சொந்தமான சில கழிவகற்றல் வாகனங்கள் குறுகிய இடங்களில் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில், தொலைதூரச் சேவைக்காக வாடகை வாகனங்கள் செல்கின்றன. இதற்கான காரணங்கள் மோசடிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குச் சொந்தமான வாகனங்கள் சில இயங்கு நிலையில் உள்ள போதிலும், அவை உயர் அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தால் இயங்காமல் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் பாரதூரமானது என்றும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

வருடாந்தம் 6 கோடி ரூபாவை வாடகைக்குச் செலவிடுவதைவிட, புதிய வாகனங்களைத் தீர்வையற்ற வரியின் கீழ் கொள்வனவு செய்யமுடியும் என்றும், யாழ்ப்பாணம் மாநகரசபையின் வாகனங்களை கூடுதலான வினைத்திறனுடன் இயங்க வைக்கமுடியும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த விடயத்தில் இதுவரை இடம்பெற்ற பெரும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் தம்மிடம் உள்ளன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கபிலன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!
அடுத்த செய்தி கஹவத்தை துப்பாக்கிச்சூடு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முதிர முன்பே காலபோக நெல் அறுவடை செய்யும் கிளிநொச்சி விவசாயிகள் – விளைச்சல் தொடர்பில் கவலை

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

மே 31, 2026
இலங்கை

வடமாகாண ஆளுநருக்கு அரசியல் வகுப்பெடுத்தவர் மாவை – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 1, 2026
இலங்கை

யாழிற்கு வருகை தந்த நீளிரா படக்குழு

ஏப்ரல் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?