Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மஹவ காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்ப்பு!

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிற்பகல் மஹவ காட்டுப் பகுதியில் காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறை விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, உயிரிழந்த நபர் தனது காரில் பயணித்தபோது சந்தேக நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நேற்று (29) தொரடியாவ மற்றும் மஹவ பகுதிகளில் 1.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

காட்டுப் பகுதியில் ஒரு வாகனத்திற்குள் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜீப்பின் முன் இருக்கையில் எரித்துக் கொல்லப்பட்ட நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

அந்த நபர் காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த 25 ஆம் திகதி தொரடியாவ காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

மனைவியின் முறைப்பாட்டில், உயிரிழந்த நபர் சம்பவத்தன்று தலை முடியை வெட்டுவதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் குறித்து மஹவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
அடுத்த செய்தி வான்வெளியை திறந்தது ஈரான்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மஸ்கெலியாவில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் இலங்கை விஜயத்தின் போது முக்கிய திட்டங்கள் கைச்சாத்திடப்படும் …..

மார்ச் 22, 2025
இலங்கை

நாளை ஜனாதிபதி – சட்டமா அதிபருக்கிடையிலான கலந்துரையாடல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வாழைச்சேனையில் அண்ணன் மீது தம்பி கத்தி குத்து தாக்குதல்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?