Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பு முயற்சி!

ஜூன் 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையோடு காணப்படும் மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பு செய்யவுள்ளமை குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இன்றைய தினம் விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

வன்னி மாவட்டத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் கீழ் பள்ளிமுனை என்னும் கிராமம் உள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்கள் கடல் தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டு கடலினை அண்டி வாழ்ந்து வருபவர்கள்.

இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற கிராமம். இந்த கடலினை அண்டியதாக 24 குடும்பங்கள் 10 பேர்ச் காணி தூண்டில் அரசாங்கத்தினால் வீடு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் 1984ம் ஆண்டு தொடக்கம் 1990ம் வரை வாழ்ந்து வருகிறார்கள்.

இது தனி நபருக்கு சொந்தமான காணி .ஆனால் 1984 ம் ஆண்டு இக்காணி துண்டுகளை வீடமைப்பு திணைக்களம் வேண்டி வீடுகளை அமைத்து குடியேற்ற திட்டம் ஒன்றை நிறுவி மீளவும் அங்கு குடியேறியவர்களுக்கு விற்று அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொண்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

இது தனி நபருக்கு சொந்தமான காணிகள் மொத்தம் (2 acers and 02 perch ) இதற்குரிய உறுதிப்பத் உறுதிப் பத்திரங்களும் இவர்களுடைய கைகளில் இருக்கின்றன.

அண்மைக்கால யுத்தம் காரணமாக இந்த மக்கள் தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த பூர்வீக காணிகளையும், வீடுகளையும் கைவிட்டு இடப்பெயர்வை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது தவிர்க்க முடியாத தோன்றாகி விட்டது.

மக்கள் 1990ல் இடம்பெயர்ந்த பின்பு இது இராணுவம்,பொலிஸ், தற்பொழுது கடற்படையினரின் முகாமாக இருப்பிடமாக மாறியிருக்கிறது.

அவர்கள் இந்த பொதுமக்களுக்கு சொந்தமான குடியிருப்புக்களை ஆக்கிரமித்து தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து தங்களது சொத்தாக மாற்றிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காணியுடைய உரிமையாளர்கள் இவற்றை மீட்டெடுப்பதற்காக நீதிமன்றில் வழக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இந்த காணிகளை அரச சொத்தாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றது.என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!
அடுத்த செய்தி முல்லைத்தீவில் திடீரென வெட்டப்பட்ட வீதிஅவதியுறும் விவசாயிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Quebec Tamil fest-2025

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

முன்கூட்டிய தேர்தலுக்கு தயாராகுங்கள் – கனடிய புதிய ஜனநாயக்கட்சி அறிவிப்பு..!!

பிப்ரவரி 14, 2025
1
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மார்ச் 2, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் தட்டம்மை நோய் தாக்கம் அதிகரிப்பு!

மார்ச் 11, 2025
இலங்கை

வவுனியா மாவட்ட சர்வ மத மனிதநேய பேரவையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு.

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?