சஸ்காட்செவன் மாகாணத்தில் அமைந்துள்ள டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை, காட்டுத்தீ முழுமையாக அழித்துள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள பல வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலை காணப்படுகின்றது. Wolf Fire என்று அழைக்கப்படும் இந்த காட்டுத்தீ, பலத்த காற்றினால் உந்தப்பட்டு வீரியமாக எரிந்துள்ளது. இதன் காரணமாக, டெனேர் பீச்சில் எஞ்சியிருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களும் அத்தியாவசிய ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
டெனேர் பீச் கிராமத்தின் வடக்குப் பிரதேச நிர்வாகம் வெளியிட்ட பேஸ்புக் பதிவின்படி, 9வது அவென்யூவின் தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் தீயினால் அழிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடைசி கணக்கெடுப்பின்படி சுமார் 699 பேர் வசிக்கும் டெனேர் பீச்
கிராமத்தில், செல்லுலார் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பரவலான அழிவு அப்பகுதியில் ஏற்பட்ட போதிலும், தீயணைப்பு நிலையம், நிர்வாகக் கட்டிடம் மற்றும் டெனேர்ப்ளெக்ஸ் (Denareplex) ஆகியவை இன்னும் சேதமடையாமல் உள்ளமை குறிப்பிடத்
தக்கது.
