யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில், பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த 64 வயதுடைய இரத்தினம் சண்முகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த நபரை இன்றையதினம் காணவில்லை என உறவினர்கள் தேடியபோது அவர் கிணற்றடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத்தெரியவந்துள்ளது .
இந்தநிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
இந்த மரணம் குறித்த உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
