முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘சந்திரன் நகர்’ வீடுகள் கையளிப்பு நிகழ்வானது இன்றைய தினம்(28) பி.ப 4.00 மணியளவில் கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பில்
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமா மகேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் இலங்கைக்கான இந்நிய உயர்ஸ்தானிகர் உயதிரு. சந்தோஷ் யாவ், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.
குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யாவ் அவர்களால் இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட எனப் பலரும் கலந்துகொண்டனர்.


