திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேககட்டுப்பாட்டை மீறி வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பதுரியா நகர் ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஓட்டுமாவடியைச் சோந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவுக்கு சென்று அங்கிருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பிரயாணித்த போது வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் வேககட்டுப்பாட்டை மீறி பாலத்துடன் மோதி வீதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
