தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறுவதற்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என, மக்களிடம் அந்த கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சொந்த ஊரான கல்கரியில் கூடியிருந்த பெருந்திரளான கூட்டத்தினரிடம் உரையாற்றிய போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
கருத்துக்கணிப்புகள் நெருக்கமான போட்டியை காட்டுவதையும் மீறி, 10 ஆண்டு கால லிபரல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பியர் பொய்லிவ்ர் கடும் முயற்சி செய்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பியர் பொய்லிவர்ரின் சொந்த ஊரான கல்கரி ஆனது, கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டையாக இருந்தாலும், லிபரல் கட்சி சில இடங்களை வெல்லும் நம்பிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
