2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளரான குர்ஜப்னீத் சிங் வெளியேறியுள்ளார்.
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டெவால்ட் பிரேவிஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக டெவால்ட் பிரேவிஸ் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.