பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தனது மகன் அன்புமணியை அப்பதவியிலிருந்து, மருத்துவர் இராமதாஸ் விலக்கியுள்ளார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இனி தாமே செயற்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய மருத்துவர் இராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே கருத்துமுரண்பாடுகள் இருந்து வந்தன, தற்போது, கட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளதன் மூலம், கூட்டணி முடிவு முழுவதும், தனது விருப்பத்தின் படியே இருக்கும் என்பதை மருத்துவர் இராமதாஸ் உணர்த்தியுள்ளார்.