கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுக்கு மட்டும் நான்கு கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கும் சூழலே அவருடைய பிரசாரத்தின் போது காணப்படுகின்றது.
பியர் பொலிவரின் பிரசாரக் குழுவே, ஊடக அணுகலை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது எனத் தெரியவருகின்றது.
உடனடிக் கேள்விகளை சரியாக எதிர்கொள்ளாமை மூலம் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதே இந்த உத்தியின் நோக்கம் என அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவரின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்த சில பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்கள் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பொய்லியேவ்வின் இந்த அணுகுமுறை ஊடக சுதந்திரத்தை மீறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன